Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கட்டாக்: நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் நேதாஜி குறித்த நினைவுகளையும், அவரது புகைப்படங்களையும் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள நேதாஜி சிலைக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை பராக்கிரம தினமாக (வீர தினம்) கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது பராக்கிரம தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.